மொழியை சோதித்துக் கொண்டு இருக்கும் புதுவகை எழுட்துகளில் காணக்கிடைக்காத நேசத்தை, தென்னெழுச்சியை, நுட்பத்தை முன் வைக்கின்றன சாணக்யாவின் கதைகள். ச்மூகத்தின் ஆதிக்க மதிப்பிடுகளால் தமது கௌரவத்தைப் பறிகொடுத்த மனிதர்கள் இவர் கதைக்ளின் ஊடாக மீண்டும் அதைக் கண்டடைகிறார்கள்.
என்ற காலச்சுவடின் அறிமுகம் இவரடு எழுத்துக்கு இருக்க இந்த புத்தகத்தை ஒரு சின்ன விபத்தாகப் படிக்க நேரிட்டது. படித்து முடித்த பின் இவருக்குக் கொடுத்த அறிமுகம் உயர்வுநவிர்ச்சி அல்ல என்பது புரிந்தது.
கடந்த நான்கு வருடங்களாக எழுதத் துவங்கியவ்ர்தான் ்தாக ஜே. பி. சாண்க்கியா. அவருடைய முதல் தொகுதியாக இந்தக் கதைத் தொகுப்பு வந்துள்ளது. 10 கதைகள் கொண்ட தொகுப்பைப் படிக்க எனக்கு 20 நாட்கள் எடுத்துக் கொண்டது. அதன் பின் எங்கோ மனதில் ஒரு மூலையில் இவருடைய குரல் 5 மாதங்களாக ஒலித்துக் கொண்டு இந்தப் பதிவை இத்தனை நாட்கள் கழித்தும் போடக் கூடிய உந்து சக்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் அதன் வேகத்தை நீங்கள் புரிந்டு கொள்ளலாம். அந்தத் தொகுதியில் இன்னும் எனது மனத்தில் நின்ற சிலக் கதைகள் குறித்து கூறுகின்றேன்.
என் வீட்டு வரைபடம்்: கதைத் தொகுப்பின் பெயருக்குப் பெயர் கொடுத்த ்பெயருக்குபெயர்கொடுத்த கதை.
தொகுப்பில் இரண்டாவது கதைதான். கதையின் பெயருக்கு ஏற்றாற்போல் ஒரு சிறுவன் தனது வீட்டைப் பற்றி வரைகிற ஓவியந்தான் இது. சிறுவனுடைய வயதிற்குப் புரியாத சம்பவங்களையும், அவன் கண்டு மகிழ்கின்ற ஊர்சூழ்லையும் அப்படியே அவன் வருணிக்க அவனது வருணனையில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய கிராமிய பழக்க வழக்கங்கள், கிராம மக்களின் மனோநிலைகள், தனது பொறாமையைப் போக்கிக்கொள்ளப் போடப்படும் சதி திட்டங்கள் என்று பல சங்கதிகள் நம் மனத்தில் படிமமாய்ப் படிந்து விடுகின்றன. ஒவ்வொரு இரவும் அவன் ஊரில் கேட்கும் கொலுசு சத்தம் இரவு வேளைகளில் இவன் வீட்டுத்தொழுவத்தில் அதுவந்து அடைகிறது. அந்த ஊரில் இருக்கும் கிழட்டுப் பூசாரியின் இளைய மனைவியின் அழகு, அதன் மீது அனைத்து இளைஞர்களுக்கும்்மீ ஒருகண் இருப்பது. சிறுவனின் அக்காவின் அழகு, அதன்மீது இவனுடைய வாத்தியாருக்கு இருந்த கண். ஒரு நாள் இவன் தனது வாத்தியார் வீட்டிற்குப் போக வீடு அலங்கோலமாய்க் கிடக்கிறது. இரண்டு நாட்கள் கழித்து இவனுடைய அக்காவை அலங்கோலமாய் கூட்டிவருகிறார்கள். பின்பு இவனுடைய தாய்மாமனை அழைத்து வருகிறாகள். அவன் மந்திரவாதி போல் இவர்களது குளியல் அரையில் ஏதோ மருந்து கள்க்குகின்றான். இரவு அக்கா அலங்கரிக்கப் படுகிறாள். கொஞ்சநாள் கழித்து அவளுக்கு வேற இடத்தில் திருமணம். அந்த ஆண்டுத் திருவிழாவில் ஏழை பூசாரி சாமியாடி வரும் பொழுது மாத விலக்கில் இருக்கும் பெண் கொயிலுக்குள் வந்துவிட்டாளே என்று தன் அருளால் கண்ட செய்தியைக் கூறிக் கொண்டே மனைவியை பலி கொடுக்கிறார். மாலை சிறுவனின் அப்பா ஊர் இளைஞர்களின் கும்மாள்த்திற்கு நடுவில் கழுவில் ஏற்றப் படுகிறார். இவை அந்த வரைபடத்தில் இருக்கும் முக்கியமான அமசங்கள். இன்னும் சில புரியாத ரகசியங்களும் ஒளிந்து கிடக்கின்றன நீங்களும் படித்து புரிந்து கொள்ளுங்கள்.
ஆட்டத்தின் விதிமுறைகள்:
எந்த ஒரு விளையாட்டின் விதிமுறைகளையும் இரு அணியினரும் மதிக்க வேண்டும். ஒருவர் மீறினாலும் வரும் விபரீதம் தான் இது. முதிர்கண்ணியாய் இருந்து திருமணமாகும் ஒரு பெண் நல்ல இடத்தில் வாக்கப் பட்டும் வெகு நாட்கள் வரைக்கும் ்ட்டும் ்மாகுழந்தை குழந்தை இல்லை என்பதால் வீட்டில் சலனம் ஏற்படுகிறது. சலனம் தீர்க்க கணவனும் மனைவியும் பக்கத்தூர் டூரிங் டாக்கீஸில் படம் பார்க்கச் செல்கின்றனர். புறப்பட்ட பின்புதான் அன்று அவ்வூருக்கு ஆறு மணிக்கு மேல்தான் பஸ் போகும் என்றுத் தெரிகிறது. சரி ஆறு மணிக்கு மேல் போகலாம் என்று கிளம்பினால் படம் துவங்கிவிட்டது. இரண்டாவது ஆட்டம் முடித்து கடைசி பஸ்ஸில் திரும்ப தம்பதியர் திட்டம் இடுகின்றனர். பட்ம் முடிந்து வரும்போதுதான் அந்த பஸ் இரண்டு மாதமாக நிறுத்தப் பட்டது தெரிய வருகின்றது. சரி ஒற்றையடிப்பாதையில் நடக்கலாம் என்று கிள்ம்பும்போது மனைவி சில வஞ்சகரின் ஆசைக்கு பலியாகிறாள். மனைவியைக் காப்பாற்ற முடியாத பாவியானதால் கணவன் இந்த சம்பவம் குறித்து யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று ஒப்பந்தம் இட்டுக் கொண்டு சாதரண நிலைக்குத் திரும்புகிறார்கள். சில நாட்கள் கழித்து அவர்கள் ஏங்கி வந்த பிள்ளைச் செல்வம் கிடைக்க வாய்ப்பு கிட்டியது. ஆனால் இது அவர்களுக்கு மகிழ்ச்சிக்கு பதில் அவர்கள் வாழ்க்கையைச் சீர் குலைக்கிறது.
உடைந்த புல்லாங்குழல்:
இது ஒரு புல்லாங்குழலின் இசையை மையமாகக் கொண்டு எழும் சாதி மத எல்லை கடக்கும் ஒரு காதல் கதை. எதையுமே பேசிப் புரியாததால் ஏற்படும் தவறுகளும் அதனால் உயிர் இழக்கும் இருவரையும் பற்றி வரும் ஒரு காதல் கதை. இதன் கதையை நான் சொல்வதை விட நீங்கள் படிப்பதில்தான் சுவாரஸ்யம்.
இப்படி 10 கதைகளும் கிராமம், நகரத்து விளிம்புநிலை மக்கள், ஆதிக்கம், நேர்மையில்லாத சமூக நிறுவனங்கள், என்று சமூகக் கட்டிடத்தின் நிழல்கள் குறித்தே பேசுகின்றன. ஒரு கட்ட த்தில் கள்ளத்தொடர்புகளும், பாலியல் வேட்கைகளும்,்வே விலைமகளிர்களும் சமூகநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள்ளேயே அப்பட்டாமாய்த் தெரியாத புது உலகத்தையும், அதில் உலவும்விடுபட்ட மனிதர்களும் நம் பார்வைக்குத்தெரியாமலே போய்விட்டார்களே என்றுகூட நினைக்கத் தோன்றும். (இதுதான் சாணக்யாவின் கற்பனை உலகா என்று கேட்பவர் அதிகம்).
ஆனால் நடையும் உத்தியும் சில சாதரணக் கடைகளையும் சம்ப்வங்கலையும் கூட மந்த்திரைக்குள் ஊடுருவச் செய்கின்றன. இந்த நல்ல வாசிப்பனுவத்தை சாணக்யா மேலும் கொடுப்பாராக. அதை நீங்களும் பெறுவீராக.
……………..பெயர்: என் வீட்டு வரைபடம்
ஆசிரியர்: ஜே.பி. சாணக்யா
பதிப்பு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.75
சிறுகதை எழுத்தாளர்களில் ஜே.பி.சாணக்யாவின் பங்கு மிகவும் அளப்பரியது என்பது எனது கருத்து. சமீப காலங்களில் அவரது நூல்கள் ஏதேனும் வந்துள்ளனவா?
எனது சமீபத்திய பதிவு ஒன்றில் சென்ற வாரம்தான் இவரை நினைவு கூர்ந்திருந்தேன்.
புத்தக அறிமுகம் நன்று.