அட அந்த ப்ரியாவுக்கு என்ன கள்ளத்தனம் . எந்த ப்ரியான்னு கேட்குறீங்களா அதாங்க ‘மின்சார கனவு’ல கன்னிகாஸ்த்ரியாகப் போறேன்னு சொல்லுமே அதுதான். அதுக்காக நம்ம வைரன் எவ்வளவு அழகாக இந்த வரியைத் தேடிப்போட்டு இருக்காரு. ஆமாங்க அவரு நிச்சயமா திருக்குறள்ல இருந்துதான் இதைப் போட்டிருப்பாரு. குற்றங்கடிதல் அதிகாரத்துல ஒரு குறள்
காதல காதல் அறியாமை உய்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.
அதாவுதுங்க ஒரு அரசன் தான் கடிய வேண்டிய குற்றங்கள் என்னென்னன்னு சொல்லும் போது கடைசில இப்படி முடிக்குறாரு. தனக்கு விருப்பமானவற்றை [...]
‘இலக்கியம்’ பகுப்புக்கான தொகுப்பு
பூ கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்….!!
Posted in இலக்கியம், வகையிலி, குறிச்சொல் இடப்பட்டது இலக்கியம், பரிமேல் அழகர், மின்சார கனவு, வள்ளுவன், வைரமுத்து on ஜூன் 3, 2009 | 3 மறுமொழிகள் »
தமிழ்ச் சிறுகதைச் சாலையிலே….(2)
Posted in இலக்கியம், சிறுகதை, குறிச்சொல் இடப்பட்டது இலக்கியம், தமிழ்ச் சிறுகதை வரலாறு on ஜூலை 13, 2007 | 3 மறுமொழிகள் »
உலக அளவில் சிறுகதையின் தோற்றம் அது ஒரு இலக்கிய வடிவாக வடிவெடுத்தது குறித்து நேற்று கண்டோம். இன்று தமிழில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அது எப்படி மாற்றம் அடைந்தது என்பதைக் காண்போம்
தமிழில் சிறுகதையின் தோற்றம்:
கதை சொல்லும் மரபு தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கம் என்பதைத் தொல்காப்பியரின்
‘பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி யானும்
பொருளோடு புண்ர்ந்த நகைமொழியானும்’
எனும் டொடரால் அறியலாம்.
19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, தமிழ் இலக்கியத்தின் பரப்பிலும் வடிவத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. அச்சுப்பொறியின் பயன்பாட்டினாலும், ஆங்கில மொழியின் செல்வாக்கினாலும் தமிழ்ச் [...]
தமிழ்ச் சிறுகதைச் சாலையிலே… (1)
Posted in இலக்கியம், சிறுகதை on ஜூலை 12, 2007 | 2 மறுமொழிகள் »
எத்தனையோ பேர் சிறுகதைகளை எழுத முயற்சிக்கிறோம். சிலர் வெற்றியும் கண்டுள்ளோம் ஆனால் சிறுகதை பற்றிய புரிதல்கள் மிகச் சிலருக்கே முழுவதுமாக கிடைத்துள்ளது. அப்படிப்பட்ட புரிதல் குறித்த ஒரு தேடலின்போது கண்டெடுத்தவை….
……………………………………………………………………………………………………………………………………………
காலம் காலமாக கதை சொல்வதும் மக்களிடையேயும் வாய்மொழி மரபாக இருந்து வந்துள்ளது. நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே மக்கள் இனக்குழுக்களாக இயங்கி வந்தபோடு ஓய்வு நேரங்களில் சக மனிதர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் , உறவினர்களுடன் அளவளாவுவதற்கும், ஆதிமனிதன் புதிய சாதனம் ஒன்றைக் கையாள வேண்டியிருந்தது. அந்நேரத்தில்தான் கதைசொல்லும் மரபு உருவாயிற்று எனக் கொள்ளலாம். உலகத்துப் பல்வேறு மொழிகளில் இன்று இக்கதை சொல்லு மாண்பு ஒரு தனி இலக்கிய வகையாக [...]






