Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘கவிதை’ பகுப்புக்கான தொகுப்பு

அயனீகம்
 சூன்யத்தில் இருந்து
சூன்யத்தை நோக்கிய
பயணத்திற்கான மாற்றுக் கருத்து
 
நரம்பியல் வள்ர்ச்சியில்
முதிர்நிலை அடைந்த
நரனின் மனத்தில்
நாளும் உதித்திடும் கேள்வி
 ஏன்?
 
வெற்றிக்கும் தோல்விக்கும்
நடுவே ஊசலாடும்
உயிருள்ள வாழ்க்கைதான்
 ஏன்?
 
வறுமைக்கும் செழுமைக்கும் நடுவே
பந்தாடும் பருவந்தான்
 ஏன்?
 
தக்கோன் நிலைப்பான்
 என்றக் கூர்தலறக் கோட்பாடு
சொன்னான் டார்வின்
 
அமைதியை நோக்கிய
ஆன்மிகப் பயணந்தான்
வாழ்க்கை
மதங்கள் கூறும் மாற்று அறிக்கை
 
ஒரு ஜான் வயிற்றுக்காக
மூளை வளர்ந்தது தான்
எத்தனை! எத்தனை!!
 
முளைத்த கருத்துகள்
எத்தனை?
சாதனைகள் எத்தனை?
அதற்கான சோதனை எத்தனை?
சண்டைகள் எத்தனை?
விரியும் ஏற்றத்தாழ்வுகள்
 எத்தனை?
 
இத்தனைப் போராட்டங்களுக்குப்
பின்னும் மனிதன்
விரும்புவது ஒன்றே ஒன்றுதான்
‘அமைதி’
 
சிலருக்கு சோறு கிடைத்தால் அமைதி
சிலருக்கு வீடு கிடைத்தால் அமைதி
சிலருக்கு இவற்றிற்கான கூலி கிடைத்தால் அமைதி
அதன்பின்னும் முன்னேற்றம் தேடி
தொலைத்து விடுவது அமைதியைத் தான்…
பின்பு [...]

முழு பதிவையும் வாசிக்க »

பரிதியாய் வந்த சிவனை நோக்கி:
உணர்வோடும் உயிரோடும் அனுக்களாலான
ஊனோடும் உரைந்து விட்டாய் – உன்
காதலுக்காய் காத்துநின்றேன்
கைப்பந்தாய் மாறிவிட்டேன்
விளையாட்டில் இணைந்துவிட்டேன்
 ஆனந்தக் கூத்தாடுவோம் வா!

முழு பதிவையும் வாசிக்க »

கவலைகளுக்குக் குரல் கொடுக்காத இறைவனை நிந்தனை செய்கையில் அவன் குரல் கேட்டது:
               பகல் நிலவாய் நினைத்திடாதே – உன்                                               
              பார்வைக்குள் வரவில்லை என்பதானால்
              முடிந்தால் நிமிர்ந்து பார்
               பரிதியாவும் தோன்றிடுவேன்

முழு பதிவையும் வாசிக்க »

என்னைச் சிந்திக்கச் செய்வதும் சிவனே!
சிந்தை கலங்கிடச் செய்வதும் சிவனே!
 
பொருந்தா பெருமைகள் தந்ததும் சிவனே!
தீரா பழிகள் சேர்த்ததும் சிவனே!
 
முந்தை கருமப் பலனென்று கூறி
இடையே இன்னல்கள் இட்டதும் சிவனே!
 
முன்னே காலன் வந்துநின்ற போதும்
 எதிர்த்தெனை எழுப்பி விட்டதும் சிவனே!
 
வாழ்விற்கு அர்த்தம் உண்டென் றுணர்த்தி
புத்துயிர் தந்து வள்ர்ப்பதும் சிவனே!
 
உண்ணா நோன்பு நோற்ற நேரம்
உயிரைக் காத்து வந்ததும் சிவனே!
 
உயர்ந்த எண்ணங்கள் தந்த போதும்
உடலுள் ஒளிந்து வாழ்தல் தகுமோ!
 
உன்னை வெளிக்கொணர உயிரே
இன்னும் என்ன செய்திடல் வேண்டும்!
 
உன்மேல் பழி சுமத்தி ஓடும்
கோழையின் வாதங்கள் என்றா நினைத்தாய்
 
எந்தன் பாரங்கள் தாங்க [...]

முழு பதிவையும் வாசிக்க »