நான் காலேஜ் படிக்கும்போதே நாவல் எல்லாம் எழுதுறதுக்கு நோட் புக் வாங்கி வச்சிருப்பேன். ஆனா சில நண்பர்கள் என்னை சீக்கிரம் கதையை முடிக்க வைக்கணும்ங்கிறதுக்காக அந்த நோட்ல இருக்கிற பக்கங்களை கிழிச்சு சிறிசாக்கி ஏமாத்துவாங்க. அது மாதிரி தாங்க நேற்று நட்சத்திர வார முடிவுரை எழுதலாம்னு காத்துகிட்டு இருந்தேன், ஆனா மழை அடிச்சதால நெட் வரலை. யாரு செஞ்ச சதியோ? இப்ப தான் வந்தது.
சரி மேட்டருக்கு வரேன். இந்த ஒரு வாரமும் நிச்சயமா எனக்கு நல்ல வாரமா இருந்தது. சில ஆரோக்கியமான விவாதங்களைத் தொடங்க ஆரம்பிச்சேன். அதுல நான் எதிர்பார்த்ததை விட அதிகம் பேர் கல்ந்து கொண்டீங்க ரொம்ப சந்தோஷம். புது நட்புகள் வேறு. ஆனா வலை உலகத்துப் பெரிய தலைங்க எட்டிப்பார்க்காதது குறித்து வருத்தம் தான். இன்னும் அவர்களும் வருமளவுக்கு நல்ல பதிவுகளைப் போடவும் கத்துக்கணும். கத்துக்குறேன். இந்த ஒரு வாரம் நான் முடிக்க உதவியா இருந்த அனைத்து நண்பர்களுக்கும் வாய்ப்பளித்த தமிழ்மணம் குழுமத்தாருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.இன்றோட ஒரு அத்தியாவசிய வேலை காரணமா வலைப்பூவுக்கு ஒரு ரெண்டு மாசம் லீவு விடறங்க. நவம்பர்ல தான் பார்க்க முடியும்னு நினைக்கிறேன். ஆனால் உங்கள் அனைவரையும் மிஸ் பண்ணுவேன்.
அப்புறம் தலைப்புக்கு வரேன். நம்ம முதல் பதிவுல முத்துலட்சுமியக்கா நிறைய பேசுறதைப் பத்தி எழுதி இருந்தேன். அவங்களையே இந்த ஒரு வாரம் வந்த நம்ம பதிவுகளைப் பத்தியும் நம்மளைப் பத்தியுமெழுதச் சொன்னேன். அவங்களோட பிஸியான நேரத்துல நமக்காக டைம் ஒதுக்கி எழுதி கொடுத்தாங்க. ரொம்ப நன்றியக்கா… இனி முத்தக்கா……
……………………………………………………………………………………………………………………………………………
முடிவுரை முன்னுரை எழுதற அளவுக்கு நான் பெரிய ஆளு இல்லைப்பான்னு சொன்னேங்க நான் .. பரவாயில்லை எனக்கு எழுதிக் கொடுத்து பெரியாளாகிக்குங்கன்னு சொன்னப்புரம் நம்மளை கேட்டு செய்யலன்னா பெரிய பந்தா வுடறாங்கன்னு சொல்லிடுவாங்களோன்னு களத்தில் இறங்கிட்டேன்.. ப்ளாக்கரில் எழுதாததால் ஒரு குறைதான்… வார்ட்ப்ரஸ் தளத்தில் எழுதும் சிலருடைய பதிவுகள் பின்னூட்ட திரட்டிகளில் தொடர்ந்து வருவதில்லை..முதல் பக்கத்தில் இருக்கும் போதே படித்தால் உண்டு… சரி நட்சத்திரவாரத்தில் எல்லாரும் போல தன் திறமை எல்லாவற்றையும் முன்னே வைத்து ஒரு பந்தா காட்டுவாராக்கும் என்று பார்த்தால் வெறும் கேள்விகளால் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பதிவாய் போட்டுக்கொண்டிருந்தார்… ஏதாச்சும் செய்யணும்ப்பா என்று சில பேர் என்னேரமும் சொல்லிக்கொண்டு இருப்பார்கள்…அது போல அதைசெய்தால் என்ன இதை செய்தால் என்ன என்று சொல்லிக்கிட்டு ஆரம்பித்தார் நட்சட்த்திரவாரத்தை…ஆமாம் இப்படிஎதாச்சும் செய்யனும் என்கிற ஆர்வம் இருக்கின்ற இளைஞர்கள் கம்மிதான். உங்கள் முயற்சி வெற்றியடையட்டும் வாழ்க வளமுடன்.. வழக்கம்போல நொய் நொய் ன்னு பேச ஆரம்பிச்சிட்டேனா..சரி விசயத்துக்கு வருவோம்.. முதல் பதிவு காமெடி.. எனக்கும் நாலு பேரை தெரியும்ப்பா என்று சொல்ல்லிக்கொண்டு உள்ளே வந்து வந்தனம் சொன்னார்… தன் அடுத்த பதிவாக அயனுலகத்துக்கு க்காரணமான அவருடைய ஊரு பத்தி எழுதி கோயில் பத்தி விளக்கி இருந்தார் அதில் இருந்தே விழிப்புணர்ச்சி பதிவுகளை தொடங்கிட்டதா நினைக்கிறேன்…குளத்தை தூர் வாரரது பத்தி ஆரம்பித்தார்..
அடுத்ததா நியூடெல்லி ரயில் , திருநங்கைகள் ஓரிரு உதாரணம் வச்சு எல்லாரையும் குத்தம் சொல்லக்கூடாது ன்னு சொல்லவர்ரார் சரிதானே இங்க லிவிங் ஸ்மைலோட பதிவுகளை படிக்கும் வரை எனக்கும் கூட கொஞ்சம் அவங்க மேல கோபம்கலந்த வருத்தம் இருந்தது. அரசியலில் …நம்மாள செய்ய முடிஞ்ச விசயத்தை ஓட்டு போடறது தாங்க அத சரியாச்செய்யாம அரசியலை குத்தம் சொல்லக்கூடாது இப்படி அட்வைஸ் …ம் உண்மை ஓட்டுப்போட போகாத படித்தவர்கள் தான் அரசியலை சாக்கடைன்னு சொல்றதே…முதல்ல ஓட்டை போட்டுட்டு பேசணும் இல்லயா அவங்க.அடுத்தது திருமூலர் சொன்னது ல எத்தனையோ விசயம் இருக்க இந்த விசயத்தை பத்தி இப்ப என்ன அவசரமோ சாருக்கு …சரிப்போகட்டும்… எதோ பழமையிலிருந்து நல்ல விசயங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவரணும்ங்கற ஆர்வத்துல நாலு பேர் வந்து படிக்கணும்ன்னு தலைப்பை கவர்ச்சியா வ்ச்சி இதுவரை என்னோடது படிச்சாங்களா இப்ப பாருங்கன்னு குஷ்பு மேட்டரை போட்டுட்டு அதிகம் படிச்சதா ஒரு போஸ்ட் போட்டமாதிரி இது வும் அன்னைக்கு அதிகம் பார்வையிடப்பட்ட வேர்டுப்ரஸ் பதிவுல வந்தது..ம் நம்ம மக்களும் இப்படி தலைப்பு வச்சாத்தானே ஓடி வராங்க…
மொசார்ட் சிம்பனியும் குழந்தைவளர்ப்பும் அதுவும் பழமையான நம்மோட ஒரு கலையின் விசயத்தை மீண்டும் வெளிச்சம்போட ஆசைப்படும் கனவு தான்.. ஓசியான் திரைப்பட விழாவைப்பத்தி இப்ப போட்டதை விட அதைப்பத்தி முன்பே போட்டிருந்தால் மக்கள் போய் பார்க்க வச்தியா இருக்கும் இனி செய்திகளை முந்தித்தரணும் அயன்…எப்படியோ ஒரு சினிமா பதிவு..நட்சத்திர வாரத்தில்.சின்னபோட்டி நல்லாதா ன் இருந்தது ஆனால் பாவம் யாருமே அந்த மிட்டாயை வாங்க வரலை…நகைச்சுவையாய் எழுதினதுக்கு எனக்குத்தான் தந்திருக்கணும் பசி பத்தி ரெண்டுவரியாவது எழுதினது நான் மட்டும் தான்.. தொலைக்காட்சி கட்டுப்பாடு ஒரு செய்திவிமர்சனம்…மற்றும் ஊடக ஒழுங்கு பற்றீய ஒரு கனவு…திமுக அதிமுக ஒரே மேடையில் ???
அய்யா உங்க கிட்ட ரொம்ப கலாமின் தாக்கம் இருக்கு ரொம்ப கனவு காணறீங்க மங்கையக்காவுக்காக போட்ட கதை படிக்க திக்குன்னு இருந்தது எனக்கு… கதை என்னவோ தெளிவா இருக்கற மாதிரி தெரியல..அந்த பெண்ணை அவளோட கற்பனையை விவரித்த அளவு கதை தெளிவா இல்லை…ஒரு பொண்ணா இது மாதிரி ரொம்ப வெளிப்படையான கதை யை படிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு..இன்னொரு விசயம் சேக்கணும்…
மங்கையக்கா பேரு போட்டீருக்கே தலைப்பில் அந்த பொண்ணு க்கு எயிட்சா
(யக்கோவ் அதைத்தான் சொல்லாம புரிஞ்சிக்க வச்சிக்க புதுசா ஒரு உத்தி ட்ரை பண்ணேன். ஆனா மங்கையக்கா பேரைப் போட்டுதான் புரிஞ்சிக்க வைக்க முடியுது. நான் தோத்து இருக்கேன். ஓ.கே. – அயன்)
ஆண்டாள் பாட்டு ல இத்தனை கதை சொல்லி இருக்காங்களா சரிதான் இலக்கியம் படிக்கறாருன்னு கடைசியில் ஒரு கோடி காட்டி விட்டார் அயன்…தொடர்ந்து நல்ல விசயங்களை பின்னூட்டம் பற்றிய கவலையின்றி எழுதுங்க..அயன்.
அன்புடன்
முத்துலெட்சுமி






