இந்த வலைப்பதிவை நான் ஆரம்பித்ததே என்னுடைய எழுத்துலக அனுபவத்தை அதிகப் படுத்திக் கொள்ளத்தான். இதனுடைய 6 மாத முடிவை அளக்க… என் பாதையை சீர் செய்துகொள்ள எனது எழுத்துகள் பற்றி பொன்ஸிடம் உதவி கேட்டிருந்தேன். அவரும் அவருடைய வேலைகளுக்கு நடுவே சிரமத்துடன் பாடி வேலையை முடித்துக் கொடுத்தார். இடையில் எனது அலுவல்களும் வந்துவிட்டதால் அது கிடப்பில் இறந்து விட்டது. வெகு நாட்கள் கழித்து இன்று அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். என்னையும் ஒரு எழுத்தாளனாக அங்கீகரித்ததற்கு பொன்ஸுக்கு எனது நன்றிகள்…..
over to Pons..
………………………………………………
1. முதற்படி – மூன்றெழுத்துக் கெட்ட வார்த்தை.. ஐஏ யெஸ் தேர்வுகளைப் பற்றிய அனுபவக் கதை. கதை தொடங்கும் விதமும் காத்திருக்கும் பெற்றோரின் கனவுகள், விளக்கங்கள் என்று கவிதைகளாய் நகரும் விதமும் அருமை.
மரணம் குறித்த இந்தக் கதை ஒரு மரண வீட்டில் இறந்து போனவரின் சொந்தங்கள், அனாதைகளாகிப் போவதைக் கண்முன் கொண்டுவருகிறது. சரியில்லாத கணவனை விட்டுவிட்டு வரும் பெண்களைச் சமூகம் பார்க்கும் பார்வையை வெளிக் கொணர்ந்த விதம் மிகவும் அருமை.
3. அடுத்தது உண்மைச் சம்பவத்தைக் கதையாக்கிய ஃபீனிக்ஸ் – பரிதியை நோக்கி . உண்மைச் சம்பவத்தைக் கூட்டலும் குறைவும் இல்லாமல் அப்படியே கொண்டுவரவேண்டும் என்று முயன்றதாலோ என்னவோ முழுமை அடையாத கதையாகத் தோன்றுகிறது இது.
4. இலவசம் – அழுத்தமான கதை.. பாலியல் தொழிலாளியின் உள்மன ஓட்டங்களை விவரிக்கும் அழகான கதை. எழுத்து நடையும் நச்சென்று ஆழம் கூட்டுகிறது..
5. பீட்டருக்கு பீட்டர் விடறதுன்னா ரொம்ப பிடிக்கும்…
– ஒரு பொறுப்பற்ற இளைஞனின் குறும்புகளால் உயிரே போன சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை.
கொஞ்சம் கொஞ்சமாக, முதல் படியிலிருந்து பீட்டர் கதை வரை படிக்கையில், எழுத்து நடையில் நல்ல மாற்றம் தெரிகிறது. இயல்பான கதைகளாக வடிவெடுத்துக் க கொண்டே வருகின்றன ஒவ்வொரு அடியிலும். சமூக அவலங்களை நோக்கியே கதையெழுத முயலும் பாங்கு பாராட்டுக்குரியது.
பெண்ணியம், பெண் மொழி என்ற பேச்சுகள் இருக்கும் இந்த நேரத்தில் அயனின் கதைகள் பெண்களின் கண்வழியே பார்ப்பதைக் கண்டிப்பாக பாராட்ட வேண்டும். தந்தையின் சாவுக்குக் கூட ஒரு சொட்டு கண்ணீர் விட முடியாமல் தவிக்கும் பெண்ணின் மனநிலையைப் படம் பிடிப்பதாகட்டும், ‘இலவசமாக சுகம் தருகிறேன்’ போன்ற வார்த்தைகளால் தாக்கப் பட்ட பாலியல் தொழிலாளியின் கோபமாகட்டும், அளவாக வெளிப்படுகிறது அயனின் கதைகளில்
இன்னும் வாசிப்பனுபவத்தைப் பெருக்கிக் கொண்டு நிதானமாக எழுதத் தொடங்கினால், ஆழமான கதைகளைக் கொடுக்கும் திறமை கண்டிப்பாக உள்ளது. அயன் என்னைக் கதைகளுக்கு விமர்சனம் எழுத வேண்டும் என்று சொன்ன போது, அத்தனை கதைகளுக்கும் எப்படி எழுதுவது என்று கலங்கினேன். ஆனால், ஐந்தே கதைகளானாலும் அழுத்தமான இந்தக் கதைகள் படித்து முடித்தபின் ஏதோ செய்வது உண்மைதான். சில இடங்களில் கொஞ்சம் தேவையில்லாமல் நீட்டித்திருப்பது போல் தோன்றினாலும் கதைகள் மொத்தத்தில் நல்ல வாசிப்பினைக் கொடுக்கின்றன.
……….
என்ன மக்களே நீங்க படிச்சுட்டீங்களா… உங்க பங்குக்கு நீங்களும் இவற்றை படித்துவிட்டு என்னை வாழ்த்தலாம், வையலாம்…
படகு அக்காவே சொல்லிட்டாங்கன்னா நல்லாத்தான் இருக்கும். நிதானமா படிச்சிப் பாக்குறேன்!
சிபி அவர்களே மிகவும் நன்றி…
உங்கள் வருகைக்காக காத்திருக்கிறேன்…
//படகு அக்காவே சொல்லிட்டாங்கன்னா நல்லாத்தான் இருக்கும். நிதானமா படிச்சிப் பாக்குறேன்!//
ரிப்பீட்டே :))