எத்தனையோ பேர் சிறுகதைகளை எழுத முயற்சிக்கிறோம். சிலர் வெற்றியும் கண்டுள்ளோம் ஆனால் சிறுகதை பற்றிய புரிதல்கள் மிகச் சிலருக்கே முழுவதுமாக கிடைத்துள்ளது. அப்படிப்பட்ட புரிதல் குறித்த ஒரு தேடலின்போது கண்டெடுத்தவை….
……………………………………………………………………………………………………………………………………………
காலம் காலமாக கதை சொல்வதும் மக்களிடையேயும் வாய்மொழி மரபாக இருந்து வந்துள்ளது. நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே மக்கள் இனக்குழுக்களாக இயங்கி வந்தபோடு ஓய்வு நேரங்களில் சக மனிதர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் , உறவினர்களுடன் அளவளாவுவதற்கும், ஆதிமனிதன் புதிய சாதனம் ஒன்றைக் கையாள வேண்டியிருந்தது. அந்நேரத்தில்தான் கதைசொல்லும் மரபு உருவாயிற்று எனக் கொள்ளலாம். உலகத்துப் பல்வேறு மொழிகளில் இன்று இக்கதை சொல்லு மாண்பு ஒரு தனி இலக்கிய வகையாக வளர்ந்து வந்திருப்பது இன்று நம் ஆராய்ச்சிக்கு முக்கிய கருவாக விளங்குகிறது.
பின்புலமும் கொள்கைகளும்:
19ம் நூற்றாண்டில் ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்க ஆகிய மூன்று நாடுகளிலும் சிறுகதைக்கு இலக்கிய மதிப்பு ஏற்பட்டிருந்தது. அதிலும் அமெரிக்காவில் தான் சிறுகதை ஒரு தனி இலக்கிய வடிவம் என்ற கொள்கை பிறந்தது.
சிறுகதைக்கு இலக்கணம் வகுத்த அமெரிக்க ஆசிரியர்களுள் Natheniel Hawthorn, Edger Allan Poe, Brander Mathews ஆகியோர் குறிப்பிடத்தக்கவராவர்.
Edger Allan Poe கதைகளை விமர்சனம் செய்ய எடுத்துக் கொண்ட ஆய்வு நெறியைச் சிறுகதைப் பற்றிய இலக்கிய கொள்கையாக இலக்கிய உலகம் ஏற்றுக் கொண்டது.
அவரது கொள்கைகள்….
” சிறுகதை என்பது அரை மணிநேரத்திலிருந்து ஒரு மணி அல்லது இரண்டுமணி அவகாசத்துக்குள் ஒரே மூச்சில் படித்து முடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அதுதன்னள்வில் முழுமை பெற்றதாயும், அது தரும் விளைவு ஒரு தனி மெய்ப்பாடாயுமிருக்க வேண்டும். வாசகனின் புலன் முழுதும் கதாசிரியனின் ஆதிக்கத்தில் கட்டுப் பட்டதாயிருக்க வேண்டும்”
மேலும் சிறுகதையின் இலக்கணத்தைப் பற்றி மிகத் தெளிவாகவும் ஆழமாகவும் சிந்தித்த பிராண்டர் மேத்யூஸ்
“சிறுகதை என்பது ஒரேயொரு பாத்திரத்தின் நடவடிக்கைகளைப் பற்றியோ, ஒரு தனிச் சம்பவத்தைப் பற்றியோ அல்லடு ஒரு தனி உணர்ச்சிதரும் விளைவையோ எடுத்துக் கூறும் இலக்கிய வடிவம்” என்று சிறுகதைக்குரிய பண்பை விளக்கினார். மேலும் அவர் சிருகதை என்பது ‘சிறிய கதை’ என்ற பொருளில் இல்லாமல் ஒரு புதிய இலக்கிய வடிவத்தின் பெயரைக் குறிக்கும் தனிச் சொல் என்றா.
ரஷ்யாவில் செக்கோவ், துர்கனெவ், கொகோல், மாப்பஸான் ஆகியோரும் சிறுகதை வடிவ உணர்வைக் கொண்டுத் திறம்படக் கதி புனைந்தவர்களாவர்.
மற்ற நாடுகளைக் காட்டிலும் அமெரிக்கர்கள்தான் சிறுகதைக்கு ஒரு முழுமையான வடிவம் கொடுப்படில் வெற்றியடைந்தவர்கள். அவர்களின் வாழ்க்கையில் நிலவும் வேகமும் பொறுமையின்மையும் காரணமாக இந்த வடிவம் அமெரிக்க இலக்கிய உணர்வுக்கு ஏற்புடையதாக இருந்தது. பிராங்க் ஓ கானர், எட்கர் ஆலன் போ, ஓ ஹென்றி ஆகியவர்கள் சிறுகதை வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்த்வர்களாவர்.
இந்தச் சிறு தளத்தைப் புரிந்து கொண்டு இனி தமிழில் அதன் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து பார்ப்போம்……..
பார்க்கலாமே!
நல்லா இருக்குப்பா…சுவாரஸ்யமா இருக்கு…