நட்சத்திர வாரத்தில் அனைவருடைய சிந்தனைக்கும் தீனி போட விரும்பி இதோ ஒரு சின்ன போட்டி ஒன்று வைக்கலாம் என்று நினைக்கிறேன்.
அபோகாலிப்டோ படம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து பலருக்குத் தெரிந்திருக்க கூடும். அந்த படத்தில் ஒரு பெரியவர் கதை ஒன்று சொல்வார். அதாவது மனிதன் காட்டில் இருக்கும் விலங்குகளிடம் தனக்கு தேவையான ஒவ்வொரு பலத்தையும் வரமாகப் பெற்றுச் செல்வானாம். அப்பொழுது ஒரு ஆந்தை இவன் நம் அனைவரையும் விட பலசாலியாகி விடுவானோ என்று சந்தேகப் பட்டு கேட்கும். அதற்கு ஒரு புலி,”இல்லை இவன் அனைத்தையும் பெற்றாலும் இவனுடைய வயிறு என்றும் அடங்காது அதன் தேவையைப் பூர்த்தி செய்ய இவன் எவ்வள்வோ போராட வேண்டியதிருக்கும்” என்று சொல்லும். பழங்குடி மக்களிடைய இந்த கதை இன்னும் நிலவி வருகிறது.
தக்கோன் நிலைப்பான் என்கிற டார்வினுடைய கொள்கையும் இன்று ஈராக் ஆப்கான் போர் வரையிலும் அனைத்தின் அடிப்படையும் இந்த பசி தான். இதைத்தான் என்னுடைய முந்தைய அயனீகம் என்ற கவிதையிலும் சொல்ல முயன்றேன்.
போட்டி என்னவென்றால் “பசி என்ற சொல் உலகில் இல்லாவிட்டால்…” என்ற தலைப்பில் அனைவரும் தத்தம் கற்பனை குதிரையை ஓடவிட்டு என்னவெல்லாம் நிகழக்கூடும் என்பதை யோசித்து எழுத வேண்டும். அது கவிதை வடிலும் கட்டுரை வடிவிலும் கூட இருக்கலாம். இந்திய நேரப்படி சனிக்கிழமை பகல் 12 மணிக்குள் வரும் பின்னூட்டங்களை (தங்கள் வலைப்பூவில் எழுதி பின்னூட்டத்தில் சுட்டி அனுப்பினால் போதும்) படித்து சிறந்த பின்னூட்டங்கள் குறித்து என்னுடைய கடைசி பதிவில் எழுதப்படும்.
அதோட மட்டுமில்லீங்க ஏதோ வலைப்பூ மூலமா கொடுக்க முடிஞ்ச சின்ன
பரிசு கீழே காணப்படும் டெம்டேஷன் மிட்டாயும் வழங்கப் படும்.
வேற என்ன! உங்களுடைய படைப்பை போட்டுவிட்டு ஒரு லிங்க் நம்ம பின்னூட்டத்துல போட்டுடுங்க ஓ.கே யா?
வேறென்ன மக்களே உங்களுடைய கற்பனை குதிரையைத் தட்டி விடுங்க… ஓடட்டும்…. இனி போட்டியை யார் ஆரம்பிக்கப் போவது?