புதிராய்ப் போன கனவுகளோடு மூன்றெழுத்து கெட்ட வார்த்தை என்ற சிறுகதை (சிறுகதைன்னா என்னன்னே தெரியாத வயசுலன்னு வச்சுக்கூங்களேன்.. இன்னும் படிச்சுகிட்டு தான் இருக்கேன்:( ) மூலம் என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள நினைத்து இந்த வலைப்பூவைத் துவங்கினேன். இதற்கு இப்பொழுது மத்திய அரசுப் பணியில் இருக்கும் தியாகராஜனுக்கு தான் பல கோடி நன்றிகள் சொல்ல வேண்டும்.. அவர்தான் என்னை இந்த உலகுக்கு அறிமுகப் படுத்தினார்.
புதிய அனுபவங்கள், இனிய நட்புகள்..:) என்னிடம் இருந்து எதிர்பார்க்கும் நலம் விரும்பிகளின் எண்ணிக்கைகளும் அதிகரிக்கத் துவங்கியது… மீண்டும் மீண்டும் தோல்விகள் என்னும் பாடங்களின் சாம்பல்களுக்குள் புழுவாய் படிக்க நேர்ந்ததால் இவர்களோடும் தொடர்புகள் விடப்பட்டன… மிகச்சிலராய் சென்ஷி, முத்தக்கா என்று இரு பதிவர்களோடு மட்டுமே எனது வட்டம் சுருங்கியது… இவர்களே வலையுலகோடு எனது உறவு இன்றும் நீடிக்க பாலமாய் அமைந்தவர்கள்
எனது மூன்றாவது நேர்முகத் தேர்வின்போது எனது பார்வையில் பாலபாரதி ஏற்படுத்திய பரிமாணங்களை மறைக்க முடியாது… ஆறாவது முயற்சியில் தோல்வி பெற்றபின் அவருடைய ஊக்குவிக்கும் வார்த்தைகளை இன்னும் மறக்க மாட்டேன்.
ஏழாவது.. என்னுடைய கடைசி படையெடுப்பின் போது வாழ்ந்து வந்த அஞ்ஞாத வாச காலங்களிலும் தமிழ் இலக்கிய பாடங்களுக்கு சென்ஷி திரட்டித்தந்த குறிப்புகளும், பதிவுகளும் நிச்சயம் என்னை நெகிழ வைத்தது. ஒரே ஒரு முறைதான் அவரை பார்த்து இருக்கிறேன். சோர்வான பொழுதுகளில் சேட் செய்யும் நேரங்களிலும் அவருடைய வார்த்தைகளின் கதகதப்பும் என் வெற்றியில் முக்கிய பங்கு வகித்து உள்ளது.
எல்லாம் முடித்து வெற்றியின் கனியை பறித்து வரும்பொழுது அதன் சுவையைப் பகிர வலையுலகில் எனக்கென்று யாருள்ளார் என்று நினைக்கையிலும்… என்னையும் ஒரு மனுசனா மதிச்சு எனக்காக பதிவு போட்ட சென்ஷிக்கும், என்னை வாழ்த்தி எனக்கென்று தேன்கிண்ணத்தில் பாடல் வழங்கிய முத்தக்காவுக்கும், அந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்து கொடுத்த ஆதவனுக்கும் (உன்னை இன்னும் மறக்கவில்லை தல).. அதை படித்துவிட்டு என்னை கைபேசியிலும், என் வலைப்பூவிலும் என்னை வந்து வாழ்த்திய விருந்தினர்களுக்கும்… என் அண்ணன் பாலபாரதிக்கும்.. எனது போலீஸ் சல்யூட்…
இனி இருக்கும் வேலைப்பளுவினூடேயும் நான் சந்திக்க இருக்கும் பல சவால்களையும், சந்தேகங்களையும் உங்களோடு (இனியாவது) பகிர முடியும் என்று நம்புகிறேன்…. நன்றி நண்பர்களே…
பி.கு:) அந்த ஃபோட்டோவுல இருக்கிறது நான் தானாம் அம்மா சொன்னாங்க..:)))
ஆஹா இன்னும் மறக்கலையா 🙂 எல்லோரும் ரோல் மாடலா உங்களை சொல்லனும் தல..அந்த அளவுக்கு நீங்க முன்னேறனும்.
வாழ்த்துகள் தல 🙂
அடிக்கடி அனுபவங்களை இங்கே பகிர்ந்திக்கங்க.
அந்த போட்டோ கரெக்ட் மேட்சிங் 🙂
வாழ் த்துக்கள் அயன்..
சல்யூட்ட் அப்பவே நல்லா வச்சிருக்கீன்க.. 🙂
பாஸ்.. இனிமே நாங்க எங்க பிரண்டு ஐபிஎஸ் ஆப்பிசரா இருக்காருன்னு சொல்லிக்கலாமுல்ல பாஸ் :))
அப்பாலிக்கா அடுத்த தபா இந்தியா வர்றப்ப உன் செலவுல டிரீட் கிடைக்கணும். இல்லைன்னா உன் பேர்ல கேஸ் போட்டிருவேன் சாக்கிரத 🙂
@சென்ஷி உனக்கு இல்லாத ட்ரீட்டா.. நீ இந்தியா வர்றது தான் எனக்கு பெரிய ட்ரீட்
@ஆதவன் சுலபமா மறக்கிற் டைப் இல்லை தல.. ரோல் மாடலா மத்தவங்க நினைக்கனும்னு நான் உழைக்கல… கண்டிப்பா என்னோட அனுபவங்கள் பிறருக்கும் உதவியா இருக்கும்னு நம்புறேன்.
@முத்துலெட்சுமி நன்றி… இவ்வளவு நல்லா சல்யூட் இப்போ அடிக்க வருமான்னு தெரியல.. ஹி.. ஹி…
மனம் நிறைந்த வாழ்த்துகள். மென்மேலும் சாதிப்பீர்கள்.
அன்பின் கார்த்திக் ஐபிஎஸ்
அன்றே அம்மாவிற்குத் தெரிர்ந்திருக்கிறது – காவலராக ஆக்க வேண்டும் என்று – வாழ்க
நல்வாழ்த்துகள் கார்த்திக் ஐபிஎஸ்
நட்புடன் சீனா
ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிப்பெற்றதற்கு வாழ்த்துகள் நண்பரே.
பாலபாரதி, சென்ஷி, தினமணி மூலம் உங்களைப்பற்றி அறிந்தேன்.
வாழ்த்துகள்
இந்த உலகில் முடியாது என்பதே எதுவும் கிடையாது. ‘தோல்விகள் என்பது தோற்றுப்போவது அல்ல; முயற்சிக்காமல் இருப்பதே உண்மையான தோல்வி’ என்ற ஜார்ஜ் எட்வர்ட் உட்பெரியின் வாசகத்தை நெஞ்சில் நிறுத்தி உறுதியோடு போராடுங்கள். வானம் தொட்டுவிடும் தூரம்தான்..!
உண்மை.