Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘விவாத மேடை’ Category

ஆமாங்க இன்றைக்கு சென்னைப் பதிவு டெக்கன் க்ரானிகலைப் படிச்சா விவரம் புரிஞ்சிருக்கும்…

அதாவது கோவை சர்வஜனா பள்ளிக்கு 1925ல போன பெரியார் அங்க உள்ள விருந்தாளிகள் புத்தகத்துல “கடவுள் இப்பள்ளிக்கூடத்திற்கு மேலும் மேலும் அபிவிருக்தியைக் கொடுக்கட்டும்”னு எழுதி கையெழுத்து போட்டு இருக்காராம்.  இதை அவரது இயக்கித்தின் காரணமாக அந்தப் பள்ளிக்கூடத்து நிர்வாகிகள் (அவர்களும் நாயக்கர் என்ற பின் குறிப்பு வேற அந்த செய்திக்கு) மறைமுகமா வைத்து இருந்ததா அந்த செய்தித் தாள்ல போட்டு இருக்கு.

நான் பெரியாரை அவ்வளவா படிச்சு இல்லைனாலும் நான் புரிஞ்சு வச்சுகிட்டது அவரோட எதிர்ப்பு மூட நம்பிக்கைகள்க்கு மட்டும் தான்னுதான்.  ஆனால் அவர் கடவுளுக்கும் எதிரின்னு பேசிகிட்டு இருக்குறவங்க இதுக்கு என்ன பதில் சொல்றாங்கன்னு தெரியல. !!!

Read Full Post »

சமீபத்தில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்ட 123 உடன்பாடு நல்லதா கெட்டதா என்ற சர்ச்சை வலைக்குழுவில் நடந்து வரும் இந்த வேளையில் ஏதோ அதைப் பற்றி எனக்குத் தெரிந்த செய்திகளை இங்கே தர நினைத்து இதோ இந்தப் பதிவை எழுதுகிறேன்.

அமெரிக்கா அவர்கள் நாட்டில் செல்லாத திட்டத்தை இதோ இங்கே “இந்தியக் குப்பையில்” கொட்ட நினைப்பதாகப் பலர் கருத்து தெரிவித்து வரும் இந்நிலையில் எனக்கு தெரிந்தவை சில –

 1. இந்திய –  அமெரிக்க கூட்டு முயற்சியில் அணு சக்தி உற்பத்தி செய்வது குறித்தான பேச்சு காங்கிரஸ் துவங்கி வைத்தது அல்ல.  அது  1998ன் போது நாம் நடத்திய அணு ஆயுத சோதனைக்குப்பின் வந்த அமெரிக்க தடையை விலக்க ஜஸ்வந்த் சிங்-தால்பூட் நடத்திய பல ஆண்டு விவாதங்களின் விளைவாகும்.  இன்று பா. ஜ. கட்சி இதை எதிர்ப்பது எதிர்கட்சி என்ற மட்டிலுமே தவிர மொத்த உடன்பாட்டை எதிர்க்க வில்லை.

2. தோரியம் கொண்டு அணு சக்தி உற்பத்தி செய்ய யுரேனியமும் தேவை. ஆனால் இந்தியாவில் இருக்கின்ற யுரேனியம் நம்து இன்றைய தேவையை பூர்த்தி செய்யுமே ஒழிய நாளைய தேவைக்கு எப்படியும் வெளிநாட்டு உதவி தேவைப்படும். அதற்கு உலக நாடுகள்,நாம் NPT ஒப்பந்தத்தில் அணு ஆயுதம் இல்லாத நாடு என்ற அளவில் சேர மறுத்ததினால், போட்ட தடையை விலக்க வேண்டும். இன்று 123 உடன்பாட்டின் மூலம் இந்தியாவும் ‘பொறுப்புள்ள அணு ஆயுத நாடு’ என்ற அங்கீகாரம் கிடைப்பதினால் விலகும். அப்பொழுதுதான் யுரேனிய வர்த்தகத்தில் நாம் ஈடுபட முடியும்.  முப்பது வருடங்கள் நமக்குக்கிடைக்காத அங்கீகாரம் உள்நாட்டுக் கட்சிப் பூசல்களினால் செத்துப் போவது நியாயம் தானா?

3. மேலும் இந்தியாவின் மின்சார உற்பத்தி சக்தி வளர்ந்து வரும் வேளையில் நமது தேவைகளும் வலுக்கொண்டு வருகிறது.  சுயசார்பு இத்துறையில் வேண்டுமானால் நிச்சயம் நாம் அணு சக்தி உற்பத்தியை பெருக்க வேண்டும். அதற்கு யுரேனிய வர்த்தகம் தேவை. ஈரானோடு கொண்ட ஒப்பந்தம் இன்று ஈரான் அதிக காசு கேட்பதால் கிடப்பில் இருக்கிறது. மேலும் ரஷ்யாவோடும் எரிவாயு வாங்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது.   இன்னும் ஏழு ஆண்டுகளில் மின் உற்பத்தியில் இந்தியா தந்நிறைவு அடைவது மேற்கூறிய எல்லா திட்டங்களும் செயல் பட்டால் ஒழிய சும்மா நிகழாது.  இதில் அணுமின் உற்பத்திப் பெருக்கம் முக்கியமானது.

4.  அமெரிக்கா இந்தத் திட்டத்தின் மூலம் நம்மை அவர்களது கூட்டணியில் இணைக்க முயல்கிறது என்பது வெறும் கட்டுக் கதை.  அவ்வளவு எளிதாக நாம் நமது உரிமையை ஒப்படைக்க முடியாது. மேலும் 123 ஒப்பந்தம் என்பதில்,  நான் முழுவதுமாக படித்த அளவில் நமது உரிமைகளை ஒப்படைக்க எந்த குறிப்புகளும் இல்லை.  இன்று காங்கிரஸ் என்றல்ல எந்தக் கட்சியாயினும் இதில் ஈடுபட்டிருக்கும். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் கண்டிப்பாக இதைப் பற்றிய விவாதம் இந்த ஒப்பந்த்தை முடிப்பதில் தான் வரும். அப்படி வரவில்லை என்றால் நிச்சயம் நமது அரசியல் தலைவர்கள் நம் கண்களைக் கட்டி கிணற்றுக்கு கூட்டிச் செல்கிறார்கள் என்பது உறுதி.

5. இந்திய அணு சோதனைத் துறை விஞ்ஞானிகள் இந்த ஒப்பந்தம் குறித்து பயப்படுவது இதன் விளைவுகள் குறித்தே. அதுவும் இந்திய அணு சோதனைக் கூட வசதிகள் உலகத் தரம் வாய்ந்ததாக இல்லாத நிலையில் நாம் 14 சோதனைக் கூடங்களை IAEA வின் சோதனைகளுக்கு உட்படுத்தினால் எங்கே நமது அங்கீகாரம் பரிக்கப் படுமோ என்பது குறித்து தான். இதற்கான சான்றுகளும் பல விஞ்ஞானிகளின் பேட்டிகளும் இருக்கின்றது. தேவைப்பட்டால் தனி மடலில் அனுப்பி வைக்கப்படும்.

6. மேலும் இந்த 123 ஒப்பந்தம் நம்மோடு மட்டும்ல்ல சீனாவோடும் அமெரிக்கா போட்டுள்ளது.  என்ன சீனா NPT ஒப்பந்தத்தின் கீழ் அணு ஆயுதம் கொண்ட நாடாக அங்கீகரிக்கப் பட்டுள்ளதால் அதற்கேற்ற சலுகைகள் அதில் அடங்கும்.  நமக்கு அந்த அங்கீகாரம் இப்பொழுதுதான் கிடைக்கப் போகிறது என்பதை நாம் மறக்க வேண்டாம்.  மேலும் இது கிடைத்தால் தான் ஐ.நா. சபையில் நிரந்தர உறுப்பினர் ஆக முடியும் என்பது வேறுபக்கத்தின் உண்மை.  இது கிஸ்ஸிங்கர் நேற்று மிரட்டினார் என்பது சென்ற ஓராண்டு பத்திரிக்கைகள் தரும் செய்திகளை மட்டும் நம்பி கொடுக்கும் பொய் பிரச்சாரம் ஆகும்.  இந்திய வெளியுறவு வரலாற்றை முழுவதுமாகப் படிக்காத சிலரின் வாதங்களின் பொய் பிரச்சாரத்தை மக்கள் நம்ப வேண்டாம் என்பது தான் என் வாதம்.

கட்டாயம் நம் உரிமை பரிபோகுமோ என்ற பயம் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது.  அந்த பயத்தைப் போக்க வேண்டியதுதான் காங்கிரஸ் அரசு செய்ய வேண்டிய காரியம்.  இதற்கு மாற்றுக் கருத்து நிலவிடினும் வாதத்தில் பங்குகொள்ள நான் தயார்.  நீங்கள் தயாரா?

Read Full Post »

இன்று டில்லியில் மிகவும் அருமையாக ஓடிக்கொண்டு இருக்கும் மதுர் பன்டார்கரின் Traffic Signal படம் பார்த்து வந்தேன். உடன் எனக்கு பால பாரதியின் பதிவுதான் ஞாபகத்திற்கு வந்தது. மும்பயில் ஒரு முறை தங்கி இருக்கும் போது ஒரு தமிழ் சிறுவனின் அவல நிலை குறித்து அவர் ஒரு கதை (அனுபவம்) எழுதி இருந்தார். தியேட்டரில் முழுக்க அந்தப் பையன் தான் கண்ணில் வந்து நின்று கொண்டிருந்தான். ஆம் இந்த படமும் அப்படிப் பிச்சையெடுத்துப் பிழைக்கும் வர்க்கத்தை ஒட்டு மொத்தமாகக் காட்டும் ஒரு நடப்பியல் கதை.

சுனாமியில் பெற்றோரை இழந்து மும்பையில் குப்பை பொறுக்கி பணம் சேர்த்து அவர்களைத் தேடும் முயற்சியில் ஒரு பையன், சிக்னலில் பூ விற்றுப் பிழைக்கும் பெண், குழந்தையை வைத்து பிச்சையெடுக்கும் பிச்சைக்காரி, இரவில் பெரிய புள்ளிகளை பணமாக்கும் பாலியல் தொழிலாளர்கள் (பெண், ஆண்), சட்டை இல்லாது பைத்தியம் போல் நடிக்கும் ஒரு பிச்சைக்காரன், குஜராத்தில் இருந்து தப்பி வந்து துணி மணி விற்கும் பெண், காலையில் எழுந்ததும் வசவுகளுக்கு அஞ்சாது கார் லோன், வீட்டு லோன் குறித்து ஃபோன் செய்து பிழைக்கும் தொழிலாளிகள், வேசியின் மகன் என்று தெரிந்த பின் தானும் பித்தலாட்டம் செய்து வயிற்றைக் கழுவி முடிவில் போதை மருந்தால் உயிர் இழக்கும் இளைஞன், வயிற்றைக் கழுவ toy boys என்று சொல்லக் கூடிய வசதி படைத்த பெண்களை கவரும் இளைஞன், இவை எல்லாவற்றிற்கும் மேல் இவர்களுடைய வருமானத்தில் தொப்பை வளர்க்கும் பெரிய புள்ளிகள் என்று மும்பை நகர கீழ்தட்டு மக்களின்(பணத்திலும், பண்பாட்டிலும்) ஒட்டு மொத்த வாழ்க்கையை அங்கதச் சுவையோடு சொல்லும் ஒரு அழகான படம். அங்கே கதர் உடுத்தி இவர்களை சீர்திருத்த ஒரு சமூக ஊழியரும் உண்டு. துண்டு துண்டாய் இத்தனைப் பிரச்சனைகளையும் சுவையாகச் சொன்ன மதுர் பன்டார்கருக்கு ஒரு பெரிய ஓ…………….

இத்தனைப் பிரச்சனைகளையும் சுட்டிக் காட்டியதோடு நிறுத்தி அனைவருடைய மனதையும் தொட்டு விட்டார். ஆனால் இதற்கெல்லாம் தீர்வு என்பது சமூக மாற்றத்தில்தான் வருமே ஒழிய கற்பனையாய் இவர் கண்டு படைப்பை நீளமாகவோ, சுவை குறைந்ததாகவோ மாற்றவில்லை. ஆனால் அப்படி தீர்வு எதுவும் காணாமல் இவர்களுடைய பிரச்சனையை நாம் பணம் பண்ண ஒரு வழியாக மட்டும் மாற்றி வந்தால் இங்கே ஒரு படைப்பாளனின் பங்கு தான் என்ன? அனைவரும் இரெண்டு மணி நேரம் பார்த்து ரசித்து விட்டு ‘நல்ல படம்’ என்று கூறிவிட்டு வெளியே வந்து ஒரு டீக்கடையில் இருந்த அரசாங்க சான்றிதழ் படி 14 வயது நிரம்பிய ஒரு சிறுவனை ஏவி டீ வாங்கிக் குடித்ததுதான் மனதை இன்னும் நெருடியது. நடப்பியல் என்னும் விலங்குகளில் இருந்து நாம் (என்னையும் சேர்த்துதான்) விடுபடுவதுதான் எப்போது?

Read Full Post »

வணக்கம் நண்பர்களே,

ஏற்கனவே நான் சொன்னது போன்று இந்த வாரம் நான் எனது ஆராய்ச்சி கட்டுரைக்கு படித்துக் கொண்டிருந்தேன். கல்விக்கூடங்களில் வலைப்பூக்கள் செய்யக்கூடிய மாயங்களைப் பற்றிதான். நான் வலை உலகிற்குப் புதியவன் ஆனதால் நிறைய படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

அப்போது The hinduவில் நேற்று இந்திய வலைப்பதிவர் பற்றிய ஒரு சிறிய ஆராய்ச்சி கட்டுரை வெளியாய் இருந்தது. அதில் அவர்கள் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தது ரெண்டு விஷயம். ஒன்று பெண் வலைப்பதிவர்களின் மிகக் குறைவான எண்ணிக்கை. ரெண்டு நம் வலைப்பதிவுகளின் உள்ளடக்கம். என்னைக் கவர்ந்த முதல் விஷயம்  குறித்து யோசித்துக் கொண்டிருக்கையில் தமிழ்மணத்தின் இந்த வார நட்ச்த்திரமான பொன்ஸ் அவர்களின் கட்டுரை கண்ணில் பட்டது.

பெண்கள் பரிகசிக்கப்படுவதை குறித்து ஏற்கனவே கோபம் கொண்டிருந்த எனக்கு அவர்கள் கேட்டிருந்த பல கேள்விகள் நியாயமானதாகத் தெரிந்தது. ஆதிக்க சமூகத்தின் நக்கல் போக்கு வெளியாகுவது போல் அந்தக் கட்டுரையின் முதல் பின்னூட்டமே ஒரு பெயர் சொல்லக்கூட தைரியம் இல்லாத பேடியினதாகப் பட்டது.

இந்தியப் பெண்கள் கணிப்பொறி கையில் ஏந்தி சுய சார்பு பெற்றிடினும் அவர்களுக்கென்று இருக்கக் கூடிய சிக்கல்கள் இருக்கத்தான் செய்யுது. கல்வியாவது மாற்றங்களைக் கொண்டு வரும் என்றால் படித்தவர்களே இப்படி நடந்தால் எப்படி?

பெண் பதிவர்களே, உங்களுக்கு நான் விடுக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் தயவு செய்து எக்காரணத்திற்காகவும் எழுதுவதை மட்டும் நிறுத்த வேண்டாம். கல்வியும், கருத்துப் பரிமாற்றமுமே நம் சமூகச் சிந்தனையை மாற்ற முடியும். முடிந்தால் நீங்கள் இன்னும் பத்து பெண்களை எழுதத் தூண்டுங்கள்.

முடிவாகப் பதிவுலகில் சாதனை புரிந்து வரும் அனைத்து பெண்களுக்கும், அவர்களுக்கு ஊக்க மருந்தாய் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது பாராட்டுகள். இந்த வார நட்சத்திரமான கலாய்த்தல் சிகரம்(self proclaimed) “பொன்ஸ்” அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துகள். உங்களுக்கு ஒரு சிறு யோசனை… உங்கள் கட்டுரை அடிக்கடி complaint செய்கிற ஒரு அழுகாச்சி குழந்தையின் சாரமாக இருந்தது. அந்த மனப்போக்கைப் பெண்கள் விடுத்தாலே, எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் மனப்பக்குவம் வளர்ந்தாலே பெண்கள் முன்னுக்கு வர முடியும் என்று நான் நம்புகிறேன் நீங்க எப்படி?

Read Full Post »

அமேலியா இயர்ஹார்ட் பற்றி படிச்சோம்…..

இப்படிப் பட்ட மனித்ர்களுக்கு நடுவே…. மும்பய் குண்டு வெடிப்புக்குக் காரணம் ஆனவங்களும் இருக்காங்களே….

இப்போ…. மனித்ர்களை நல்ல திசைக்கு நடத்திச் செல்ல எது இல்லைன்னு நினைக்குறீங்க?

வழிகாட்டியா? சுய லட்ஷியமா? இல்லை கடமையை செய்ய முடியாத அரசாங்கமா.?

Read Full Post »