நான் அன்றைக்கு விளையாடிக் கொண்டிருந்தேன். ஆமாம் எங்க தெருவுல அடுக்கி வச்ச பொம்மைங்க மாதிரி இருந்த வீடுங்க எல்லாம் கலைஞ்சு போயிருந்துச்சு. மொட்டை மாடி தரையில கிடந்தா அதுல ஏறி விளையாட எவ்வளவு நல்லா இருக்கும். அப்படிதான் விளையாடிகிட்டு இருந்தேன். ஆனா, கூட விளையாட மட்டும் யாருமே வரல. எல்லோருமே அழுது கிட்டிருந்தாங்க. அத்தனை கூட்டத்திலும் அவன் மட்டும் தான் என்னையே பார்த்து கிட்டிருந்தான். எனக்கு பத்து வயசு அவனுக்கு ஒரு இருபத்தி அஞ்சு இருக்கும். எங்கிருந்தோ வண்டியில வந்து இறங்கினான். அவனுடைய அப்பா அழுது கிட்டே வெளியில வந்து இவனை கட்டிகிட்டார். அவனுடைய வீடு தான் எல்லாமே தல கீழா இருந்தது. யாரோ பொம்மை வீட்டை ஆட்டினா மாதிரி ஆட்டிருப்பாங்கன்னு நினைக்குறேன். அவனோட அம்மாவும் தங்கச்சியும் அந்த உடைஞ்ச வீட்டுக்குள்ளதான் தூங்கிகிட்டிருந்தாங்க போல இருக்கு. சின்ன பசங்க யூனிஃபார்ம் போட்டுதான் பார்த்து இருக்கேன். இன்னிக்கு இவன் வீட்டுக்கு பெரிய ஆளுங்க எல்லாம் யூனிஃபார்ம் போட்டு கிட்டு வந்தாங்க. சில பேரு காக்கில போட்டிருந்தாங்க சில பேரு வெள்ளைல போட்டிருந்தாங்க. வெள்ளை யூனிஃபார்ம் போட்டிருந்தவங்க தான் அவனோட அம்மாவையும் தங்கச்சியையும் ஒரு கட்டில் இல்ல அவரு ஏதோ சொன்னாரே ஆம்…. ஸ்டெச்ர் அதுல வச்சு… ஐ அதுல அப்படி யாராவுது வச்சு தூக்கினா எப்படி இருக்கும். ஆனா அவன் மட்டும் ஏன் என்னை அப்படியே மொறைச்சி பார்க்குறான். அவன் அழுகல.. நல்ல பையன். கலர் கலரா காரு வந்த்து.. வெள்ளை… நீலம்..
நேத்திக்கு வெள்ளை வேனுல அவனோட அம்மா தங்கச்சிய கூட்டிட்டு போனாங்க இல்லை இன்னிக்கு கருப்பு வேன்ல கூட்டிட்டு வந்தாங்க. எல்லாரும் கூட்டம் கூட்டமா நின்னாங்க. ஒரே அழுகுற சத்தம். சின்ன பசங்க நாம அழுதா எப்படி திட்டுறாங்க. இப்போ இவங்களே அழுகுறாங்க. ஷேம் ஷேம். புதுசா பெரிய மாலையெல்லாம் இருந்தது.. வாசனை கும்முனு இருந்தது. அங்கே பத்தி பொறுத்தி வச்சிருந்தாங்க. ஒரு நாளைக்கு ஒரு பத்தினு நானெல்லாம் பொறுத்தி இருக்கேன். இவங்க மொத்த பாக்கட்டையும் பொறுத்தினாங்க. பொகை கும்முனு சினிமால வரா மாதிரி வந்தது. இந்த வாசனையும் நல்லா தான் இருக்குது. சந்தன வாசனை.. அப்புறம் எல்லாம் கலைஞ்சு போய்ட்டாங்க. இன்னிக்கு அவனோட வீட்டுல நல்ல சாப்பாடு போட்டாங்க. அவன் மட்டும் நைட்ல என்னை கூப்பிட்டான். நான் அவன் பக்கம் போனேன். என் கிட்ட எதுவுமே பேசல. கொஞ்ச நேரம் கழிச்சு என்னை அவன்கூடவே இருக்க சொல்லி கூப்பிட்டான். எனக்கு வேற வேலை எதுவுமே இல்லை. நானும் சரின்னு ஒத்துகிட்டேன்.
இது தான் பெங்களூரா.. நல்லா இருக்கு. அவனோட வீட்ல யாருமே இல்லை. நான் மட்டும் தான் அவன் கூட. என்னை எங்கையுமே தனியாவே அனுப்ப மாட்டான்.அவன் கூடவே வச்சு இருப்பான். ஆனா நான் அவன் கூட இருக்கிறது யாருக்குமே தெரியாது. அவனுக்கு என்னை விளையாட வச்சு பார்க்குறதுன்னா அப்படி பிடிக்கும். எப்பையுமே அவனோட லேப்டாப் இல்லைனா கம்ப்யூட்டர்ல வச்சு விளையாட சொல்லுவான். அவன் வேலைக்கு போனா கூட என்னை ஒளிச்சு ஒளிச்சு கூட்டிட்டு பொயிடுவான். அவனோட ரூம் எல்லாம் ரொம்ப அழகா இருந்தது. அவனோட டேபுள், ஆஃபீஸ் வரன்டா, சோஃபா எல்லாத்து மேலையும் குதிச்சு குதிச்சு விளையாடுவேன் ஆனா யாரும் இல்லாதப்போ தான். யாராவுது பார்த்திட்டா திட்டுவாங்க இல்லை. தினம் ராத்திரி மட்டும் என்னோட மடியில படுத்து தூங்கனும்னு அடம் பிடிப்பான். 25 யிர்ஸ் பாய் ஒரு டென் யிர்ஸ் பாயோட மடியில படுக்கனுமா. நானும் சரின்னு சொல்லுவேன். சில நேரம் என்னை இருக்கி கட்டி பிடிச்சிகிட்டு தூங்குவான். அவனுக்கு ஃப்ரென்ட்ஸ் ரொம்ப கம்மி. என் கிட்ட மனசு விட்டு பேசுவான். நிறைய ஐஸ் க்ரீம் வாங்கித்தருவான். நான் தான் அவனோட க்லோஸ் ஃப்ரென்டுன்னு சொல்லுவான். அது தான் அவ்வளவு ஐஸ்க்ரீம் வாங்கி தந்தான்.
ஒரு நாள் ஒரு பார்க்குக்கு கூட்டிட்டு போனான். ஐ இங்க எவ்வளவு க்ரீன் கலர் செடிங்க. கலர் கலர் பூ கூட. நான் அந்த பார்க்ல சருக்கு மரம் இருந்தது ஏறி ஏறி விளையாடினேன். அவன் இவ்வளவு நாள் என் கூட தான இருந்தான் ஆனா எப்பவுமே அந்த ஃப்ரென்டை பத்தி சொல்லவே இல்லை. அவ தான் சந்தியா. நான் அவளை அவனோட ஆஃபீஸ்ல வச்சு பார்த்திருக்கேன். ஆனா அவளும் இவனோட ஃப்ரென்டுனு சொன்னதே இல்லை. பார்க்குக்கு அவளையும் வர சொல்லி இருக்கான். எனக்கு ஒரே தூக்கமா வருது. ஆனா பார்க்ல நிறைய விளையாட இருக்கு. அவ வந்ததும் என்னை மறை முகமா போக சொல்லி சொன்னான். நான் தூங்கிட்டேன். இது கனவான்னே தெரியல.. பார்க்குல நிறைய மரம் இருந்தது. இந்த மரம் மட்டும் வித்தியாசமா இருந்தது. ஒரு தேன் கூடு அதுல தேனி இல்லை. நேரா போய் வாயை வச்சு தேன் குடிக்கலாம். குடிக்க குடிக்க தேன் வந்துகிட்டே இருந்தது. தேன் கூட்டுக்கு கீழையே ரெண்டு மாம்பழம் இருந்தது. ரெண்டையுமே சேர்த்து சேர்த்து சாப்பிட சுகமா இருந்தது. கொஞ்ச நேரத்துல எல்லாம் சோனு மழை. நான் ஃபுல்லா நனஞ்சுட்டேன். இந்த காட்டுல என்னை விட்டுட்டு தனியா பொய்ட்டான். எனக்கு பயமா இல்லை. மழை வந்ததும் சோர்வா இருந்தது தூங்கிட்டேன். காலைல இருந்து விளையாடினேன் இல்ல. நான் ஆனா ரொம்ப நாளா தூங்கிட்டேன். அவனும் என்னை எழுப்பவே இல்லை. இப்போல்லாம் வேலைக்கு போகும்போதுகூட என்னைக் கூட்டிட்டு போக மாட்டேங்குறான். பிலடி ஃபூல். அவனுக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடச்சுட்டாங்க போல இருக்கு. எனக்கு கோபம் இல்லை. நான் வீட்டுலையே தூங்கிடறேன். இப்போல்லாம் எப்போவாவதுதான் அவன் என்னைக் கட்டிப் புடிச்சு தூங்குறான்.
ஆனா அன்னிக்கு சந்தியா வந்தா.. அவசர அவசரமா இவன் வெளிய போனான். நான் இங்க இருக்கிறது அவளுக்கு தெரியாது இல்லை. அவ அவனை கட்டிப் புடிச்சு ஓன்னு அழுதா. ரெண்டு பேரும் என்னமோ பெசினாங்க. அப்புறம் இவன் என்னையும் கூட்டிகிட்டு ஊருக்கு போனான். உடைஞ்சு இருந்த வீடு திரும்பி சரியா பொயிடுச்சு போல இருக்கு. அவனோட அப்பா அவனை சத்தம் போட்டாரு. திட்டினாரு. கூடவே சந்தியாவும் வந்து இருக்கா போல இருக்கு. ஆனா போகும்போது என்னை இங்கயே விட்டுட்டு பொயிட்டான். அவனுக்கு என் ஞாபகமே இல்லை. ரெண்டு மாசம் கழிச்சுதான் வந்தான். நான் வழக்கம் போல விளையாடிகிட்டு இருந்தேன். ரோஜாப்பூ மாலை வாசனை. சந்தனம் பத்தி கும்முன்னு இருந்தது. வந்தான். நிறைய பேரு அழுது கிட்டு இருந்தாங்க. இவன் என்னை பார்க்கல.. ஆனா அழுகல.. ம்ம்ன்னு இருந்தான். சத்தம் போட்டா அவுங்க அப்பா தூங்கிகிட்டு இருந்தவரு எழுந்திடுவாறில்ல. ஆனா அது மத்தவங்களுக்கு தெரியல. நைட்டு எல்லாரும் தூங்கின போது வந்தான். நான் விளையாடிகிட்டு இருந்தேன். ரொம்ப நாள் கழிச்சு என் மடியில தூங்கனும்னு ஆசை பட்டான். கட்டி புடிச்சு கிட்டான். மடியில படுத்தான். என்னென்னவோ பேசினான். எனக்கு புரியல மடியில போட்டுகிட்ட நான் தட்டி கொடுத்தேன். அவன் பேசுறது நிற்கல. சந்தியா திடீர்னு வந்துட்டா. எங்களை பார்த்ததும் பயந்துட்டா…
“டோன்ட் வொரி வென் த சப் கான்ஷியஸ் ஃபெயில் டு மூவ் அலொங்க்
வித் டைம் சச் அப்நார்மாலிட்டீஸ் அக்கர். ஸ்லைட்லி ஸ்கீஸோஃப்ரீனிக். இது எல்லாருக்குமே இருக்கிற வியாதிதான். சிலருக்கு கொஞ்சம் அதிகமா இருக்கும். அவ்வளவுதான். தான் அதிகமா அனுபவிச்ச அந்த பத்து வயச இப்போ இருக்கக் கூடிய பிசில ரொம்ப மிஸ் பண்றார் உங்க ஹஸ்பன்டு. மேலும் லாஸ் ஆஃப் ஃபேமிலி மெம்பர்ஸ். உங்களோட சப்போர்ட் தான் அவருக்கு ரொம்ப தேவை. இந்த டேப்லட்ஸ் எடுத்துக்க சொல்லுங்க. அவரை தனியா விட்டா தான் இந்த ஸ்டேட் ஆஃப் மைன்டுக்கு போயிடுவாரு. பத்திரமா பார்த்துக்குங்க”