Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘இலக்கியம்’ Category

பல வருடங்களுக்கு பிறகு எழுத நினைத்து பிரசுரித்தது… வெறும் கருவியாக அவன் அருளாலே அவன் நடத்தியது…

Read Full Post »

அட அந்த ப்ரியாவுக்கு என்ன கள்ளத்தனம் . எந்த ப்ரியான்னு கேட்குறீங்களா அதாங்க ‘மின்சார கனவு’ல கன்னிகாஸ்த்ரியாகப் போறேன்னு சொல்லுமே அதுதான்.  அதுக்காக நம்ம வைரன் எவ்வளவு அழகாக இந்த வரியைத் தேடிப்போட்டு இருக்காரு.  ஆமாங்க அவரு நிச்சயமா திருக்குறள்ல இருந்துதான் இதைப் போட்டிருப்பாரு.  குற்றங்கடிதல் அதிகாரத்துல ஒரு குறள்

காதல காதல் அறியாமை உய்கிற்பின்

ஏதில ஏதிலார் நூல்.

அதாவுதுங்க ஒரு அரசன் தான் கடிய வேண்டிய குற்றங்கள் என்னென்னன்னு சொல்லும் போது கடைசில இப்படி முடிக்குறாரு. தனக்கு விருப்பமானவற்றை அந்த அரசன் அந்த விருப்பத்துக்குக்கூட தெரியாம நுகர வல்லவன் ஆனால் அவனை பகைவர்கள் அழிக்க வழியே இல்லைன்னு சொல்றாரு.

அவரு குற்றம்னு இந்த அதிகாரத்துல சொல்றது 6 அவை செருக்கு, சினம், காமம், கஞ்சத்தனம், மானம், உவகை…  இதுல கஞ்சத்தனம், மானம், செருக்கு இவற்றோட தீமைகளைப் பற்றி 8வது 9வது குறள்ல விளக்கினவரு கடைசி குறளை இப்படி அமச்சிருக்காரு.  அதாவது கோபம், காமம், உவகை மூன்றும் முற்றிலும் அழிக்க முடியாததால அந்த மூன்றையும் அந்த மூன்றுக்கும் அறியாம நுகர வேண்டுமாம்.  இதை நான் சொல்லல நம்ம  பரிமேல் அழ்கர் சொல்றாரு.  நல்லா இருக்கு இல்லை.

அப்போ சாமியாரா போகனும்னு நினைக்குற ஒரு பொண்ணு காதலிக்க ஆரம்பிச்சா அவ மானம் அவளோட கொள்கை அழியாமல் காக்கப்படணும்னா இப்படித்தான அந்த காதலுக்கே அறியாமல் நுகர வேண்டியதா இருக்கும்.  வைரன் சரியான முறையில வார்த்தைகளைத் தேடிப் பொறுக்கிதானே எழுதி இருக்கான். அவனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.  இப்போ அந்த பாட்டைக்கேட்கும்போது அந்த பெண்ணுக்குள்ளேயே நம்மால போய்வர முடியும் இல்லையா?

Read Full Post »

உலக அளவில் சிறுகதையின் தோற்றம் அது ஒரு இலக்கிய வடிவாக வடிவெடுத்தது குறித்து நேற்று கண்டோம். இன்று தமிழில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அது எப்படி மாற்றம் அடைந்தது என்பதைக் காண்போம்

தமிழில் சிறுகதையின் தோற்றம்:

கதை சொல்லும் மரபு தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கம் என்பதைத் தொல்காப்பியரின்

‘பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி யானும்

பொருளோடு புண்ர்ந்த நகைமொழியானும்’

எனும் டொடரால் அறியலாம்.

19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, தமிழ் இலக்கியத்தின் பரப்பிலும் வடிவத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. அச்சுப்பொறியின் பயன்பாட்டினாலும், ஆங்கில மொழியின் செல்வாக்கினாலும் தமிழ்ச் சிறுகதை வழக்கில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது.  வாய்மொழியாக வழங்கி வந்த கதைகள் பல நூல் வடிவில் அச்சுப் பெற்று வெளியிடப்பட்டன.  இவ்வகையில் முதன்முதலில் அச்சில்வந்தது வீரமாமுனிவரின் ‘பரமார்த்த குருவின் கதை’அதைத் தொடர்ந்து ஈசாப்பின் நீதிக்கததகள், திராவிட பூர்வகாலக்கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றவைத் தமிழில் அச்சாயின.  இதனால் தமிழ்நாட்டில் கதை கேட்பது மட்டுமல்ல படிக்கும் பழக்கமும் பரவத்தொடங்கியது.

இவற்றைத் தொடர்ந்து தமிழில் சிறுகதை எழுதும் போக்கு வளர்ந்தது. இவ்வளர்ச்சியின் போக்கை நான்கு காலக்கட்டங்களாகப் பிரித்து ஆராய்வது பொருந்தும்.

1. 1850 முதல் 1925 வரை

2. 1926 முதல் 1945 வரை

3. 1946 முதல் 1970 வரை

4. 1970 முதல் இன்று வரை ( இதை மட்டுமே பலவாகப் பிரிப்பர்)

1. 1850 முதல் 1925 வரை :

அச்சுவாகனமேறிய பழைய வாய்மொழிக்கதைகளெல்லாம் அந்நாளில் கட்டுப்பாடில்லாமல் வெளிவந்து கொண்டிருந்தபோது பெரும்பாலான கதைகள் பொழுதுபோக்க உகந்தவைகயாயிருந்தும் நல்லன போதிக்கும் வகையில் இல்லை. இந்நிலையில் ஆசிரியர் சதாசிவம்பிள்ளை(1820-1895)  தான் எழுதிய கதைகளைத் தொகுத்து ‘நன்னெறி கதாசங்கிரகம்’ என்ற பெயரில் வெளியிட்டார்.

வீராசாமி செட்டியார் (1855) தாம் எழுதிய உரைநடைக் கட்டுரைகளைத் தொகுத்து ‘வினோத ரசமஞ்சரி’ என்று வெளியிட்டார்.  பல வரலாற்றுக் கதைகளுடன் வீரமாமுனிவரின் பரமார்த்த குரு கதியும் இத்தொகுப்பில் வெளிவந்தது.

ஆசிரியர் சி.வி. சுவாமிநாதய்யர் 1892ல் ‘விவேக சிந்தாமணி’ என்ற சஞ்சிகையைத் தொடங்கினார்.  இதில் 19ம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் சிறுகதை எழுத்துப்பயிற்சி மேலும் முன்னேறி 20ம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் பலரது கைகளில் சோதனைகளாக வெளிப்பட்டது. ஆனால் எட்கர் ஆலன் போவவயோ, பிராண்டர் மேத்யூஸையோ அல்லடு அவர்கள் கொடுட்த சிறுகதை இலக்கண விளக்கங்களையோ அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.  எனினும் கதை சொல்லும் முறையிலும் கதைப் பொருளிலும் பாத்திரங்களைப் புதுவகையில் படைப்பதிலும் அவர்கள் பல்வேறு பாணியைச் சோதித்துப் பார்த்தார்கள் என்பது தெரிகிறது.

அ. மாதவைய்யாவும், பி. ஆர். ராஜம் ஐயரும் தமது படைப்புகளை விவேக சிந்தாமணியில் தான் முதன்முதலாக எழுதினர்.

விவேகசிந்தாமணி நிறுத்தப் பட்டவுடன் விவேக போதினி(1908) தோன்றியது.  வ. வே. சு. ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ கதையை முதன்முதலில் அறிமுகப் படுத்தியது விவேக போதினி ஆகும். அம்மணி அம்மாள் என்ற பெண் எழுத்தாளர்  சிறுகதைப் பொருளிலும் உத்தியிலும் ஒரு புதுமையைப் புகுத்தினார். சென்னை பச்சயப்பன் கல்லூரித் தமிழாசிரியர் திருமணம் செல்வகேசவராய முதலியாரின் அபிநவக் கதைகள் என்ற தொகுப்பு பெரிதும் பாராட்டப் பட்டது.

துவக்க காலச் சிறுகதை ஆசிரியர்களுள் மாதவைய்யா (1872 – 1925) குறிப்பிடத்தக்கவர்.  இவரது கதைத் ஹ்டொகுதியான ‘குசிகர் குட்டிக்கதைகள்’ ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியானடு. இவர் பிராமணச் சமூகத்தில் காணப்பட்ட குழந்தைத் திருமணம், விதவைகள் பட்ட துயர், வரதட்சனைக் கொடுமை முதலிய சீர்கேடுகளைப் பற்றித் தமது கதைகளின் மூலம் மிக வன்மையாகக் கண்டித்தவர். இவர் எழுதிய ‘பஞ்சாமிர்தம்’,  ‘கண்ணன் பெருந்தூது’  போன்ற கதைகள் உருவ வார்ப்புக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகள் ஆகும்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் (1882 – 1921) வங்காள எழுத்தாளர் இரவீந்திரநாத் தகூரின் சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டார்.

வ. வே. சு. ஐயர் (1881 – 1925) புதுச்சேரியில் தங்கியிருந்த காலட்டில் எழுதிய சிறுகதைகள் டான் அவரைத் தமிழ்ச் சிறுகதையின் தந்தை என்று இலக்கியச் சமூகம் ஒருமுகமாகக் கருத காரணமாயிருக்கின்றன.  ‘கம்ப நிலையம்’ என்ற படிப்பகத்தின் மூலம் பல கதைகளை வெளியிட்டார். காபுலிவாலா என்ற தாகூரின் சிறுகததயை மொழிபெயர்த்து காபூல்காரன் என்று வெளியிட்டார்.  குளத்தங்கரை அரச்மரம், மங்கையர்கரசியின் காதல் போன்ற கதைகளில் நிகழ்வு ஒருமை, கால ஒருமை, பாத்திர ஒருமை, உணர்வு ஒருமை என்ற சிறுகதைக்குறிய இலக்கணம் அனைத்தும் ஒருங்கே அமைந்திருப்பதைக் காணலாம்.

இலக்கிய வரலாற்றுக் கட்டத்தில் இக்காலம் ஒரு முக்கிய எல்லைக்கல். சிறுகதை உருவ அமைதி பெற்றதும் பின்வரும் தலைமுறையின்ர் இலக்கியப் பணியில் பக்குவம் பெற உந்துதல் கொடுத்த ஓர் இயக்கம் உருவாகியதும் இந்த கட்டத்தில் தான். உரைநடடயில் எளிமையும் புதுமையும் சேர்த்தது மட்டுமல்ல பலப்பல வடிவங்களிலும் சோதனனகள் செய்தனர். இவற்றிலெல்லாம் தொடாத பொருளில்லை. அரசியல், சம்யம், இலக்கியம், சமூகம், தேசியம் என அனைத்துப் பொருளிலும் கதைகள் படைத்தனர்.

( தொடரும்……

Read Full Post »

எத்தனையோ பேர் சிறுகதைகளை எழுத முயற்சிக்கிறோம். சிலர் வெற்றியும் கண்டுள்ளோம்  ஆனால் சிறுகதை பற்றிய புரிதல்கள் மிகச் சிலருக்கே  முழுவதுமாக கிடைத்துள்ளது.  அப்படிப்பட்ட புரிதல் குறித்த ஒரு தேடலின்போது கண்டெடுத்தவை….

……………………………………………………………………………………………………………………………………………

காலம் காலமாக கதை சொல்வதும் மக்களிடையேயும் வாய்மொழி மரபாக இருந்து வந்துள்ளது.  நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே மக்கள் இனக்குழுக்களாக இயங்கி வந்தபோடு ஓய்வு நேரங்களில் சக மனிதர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் , உறவினர்களுடன் அளவளாவுவதற்கும், ஆதிமனிதன் புதிய சாதனம் ஒன்றைக் கையாள வேண்டியிருந்தது.  அந்நேரத்தில்தான் கதைசொல்லும் மரபு உருவாயிற்று எனக் கொள்ளலாம். உலகத்துப் பல்வேறு மொழிகளில் இன்று இக்கதை சொல்லு மாண்பு ஒரு தனி இலக்கிய வகையாக வளர்ந்து வந்திருப்பது இன்று நம் ஆராய்ச்சிக்கு முக்கிய கருவாக விளங்குகிறது.

பின்புலமும் கொள்கைகளும்:

19ம் நூற்றாண்டில் ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்க ஆகிய மூன்று நாடுகளிலும் சிறுகதைக்கு இலக்கிய மதிப்பு ஏற்பட்டிருந்தது.  அதிலும் அமெரிக்காவில் தான் சிறுகதை ஒரு தனி இலக்கிய வடிவம் என்ற கொள்கை பிறந்தது.

சிறுகதைக்கு இலக்கணம் வகுத்த அமெரிக்க ஆசிரியர்களுள் Natheniel Hawthorn,  Edger Allan Poe, Brander Mathews ஆகியோர் குறிப்பிடத்தக்கவராவர்.

Edger Allan Poe கதைகளை விமர்சனம் செய்ய எடுத்துக் கொண்ட ஆய்வு நெறியைச் சிறுகதைப் பற்றிய இலக்கிய கொள்கையாக இலக்கிய உலகம் ஏற்றுக் கொண்டது.

அவரது கொள்கைகள்….

” சிறுகதை என்பது அரை மணிநேரத்திலிருந்து ஒரு மணி அல்லது இரண்டுமணி அவகாசத்துக்குள் ஒரே மூச்சில் படித்து முடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அதுதன்னள்வில் முழுமை பெற்றதாயும், அது தரும் விளைவு ஒரு தனி மெய்ப்பாடாயுமிருக்க வேண்டும்.  வாசகனின் புலன் முழுதும் கதாசிரியனின் ஆதிக்கத்தில் கட்டுப் பட்டதாயிருக்க வேண்டும்”

மேலும் சிறுகதையின் இலக்கணத்தைப் பற்றி மிகத் தெளிவாகவும் ஆழமாகவும் சிந்தித்த பிராண்டர் மேத்யூஸ்

“சிறுகதை என்பது ஒரேயொரு பாத்திரத்தின் நடவடிக்கைகளைப் பற்றியோ, ஒரு தனிச் சம்பவத்தைப் பற்றியோ அல்லடு ஒரு தனி உணர்ச்சிதரும் விளைவையோ எடுத்துக் கூறும் இலக்கிய வடிவம்” என்று சிறுகதைக்குரிய பண்பை விளக்கினார்.  மேலும் அவர் சிருகதை என்பது ‘சிறிய கதை’ என்ற பொருளில் இல்லாமல் ஒரு புதிய இலக்கிய வடிவத்தின் பெயரைக் குறிக்கும் தனிச் சொல் என்றா.

ரஷ்யாவில் செக்கோவ், துர்கனெவ், கொகோல், மாப்பஸான் ஆகியோரும் சிறுகதை வடிவ உணர்வைக் கொண்டுத் திறம்படக் கதி புனைந்தவர்களாவர்.

மற்ற  நாடுகளைக் காட்டிலும் அமெரிக்கர்கள்தான் சிறுகதைக்கு ஒரு முழுமையான வடிவம் கொடுப்படில் வெற்றியடைந்தவர்கள்.  அவர்களின் வாழ்க்கையில் நிலவும் வேகமும் பொறுமையின்மையும் காரணமாக இந்த வடிவம் அமெரிக்க இலக்கிய உணர்வுக்கு ஏற்புடையதாக இருந்தது.  பிராங்க் ஓ கானர், எட்கர் ஆலன் போ, ஓ ஹென்றி ஆகியவர்கள் சிறுகதை வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்த்வர்களாவர்.

இந்தச் சிறு தளத்தைப் புரிந்து கொண்டு இனி தமிழில் அதன் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து பார்ப்போம்……..

Read Full Post »