அந்த ஃபோன் மட்டும் வரலைன்னா என் வாழ்க்கை எப்படியோ இருந்திருக்கும். இந்தத் தொலைபேசி எண் அவளுக்கு எப்படி கிடைத்தது?
கல்லூரியின் கடைசி ஆண்டின் கடைசி நாள். நீங்க எல்லாரும் என்ன செஞ்சீங்கன்னு கேட்டா எல்லார் மனசுமே பாரமாத்தான் இருக்கும். இன்றைக்கு அது ரொம்பவே பாரமா இருக்கு.
காலேஜ் படிக்கிற வரைக்கும் எந்த அவளுக்கும் இடம் கொடுக்காமல் லைஃப ரொம்பவே ஜாலியா அது வர போக்குல எடுத்துகிட்டு எவ்வளவு நல்ல பையனா இருந்தேன். அதனால தானே ஃபர்ஸ்ட் இயர் படிச்சிகிட்டு இருந்த அவ வந்து என்னோட கடைசி நாள் அன்னிக்கு ப்ரொபோஸ் பண்ணப்ப – ” உனக்கு இப்போ என்ன வயசு.. ஒரு 18 இருக்குமா மனித உடல் காந்தமா செயல் படுற வயசு.. உன்னோட உலகம்…மிஞ்சிப்போனா இந்த காலேஜ், உன் ஃப்ரெண்ட்ஸ், நாலஞ்சு பழைய புக்ஸ் அவ்வளவு தானே.. இன்னும் உலக்த்துல நீ பார்க்க வேண்டியது நிறைய இருக்கு. நீ ஒன்னு பண்ணு காலேஜ் முடி அப்புறம் ஒரு வருஷம் எங்கையாவது வேலை பண்ணு. அதுக்கு அப்புறமும் என் மேல லவ்வு இருந்தா சொல்லு நான் ஏத்துக்குறேன்” என்று வெறித்தனமா அட்வைஸ் கொடுத்திட்டு வந்தேன்.
அப்படி இருந்த நான் போன வருஷம் அவ ஃபோன் பண்ணி “வணக்கம் சீனியரே… அஞ்சு வருஷம் எனக்கு பஞ்சா பறந்திடுச்சு. ஆனா இன்னும் என் மனசுல பத்திகிட்ட நெருப்பு அனையல… நான் இன்னும் உங்களை மறக்கல….நீங்க எப்படி? இப்பவாவது நினைப்பீங்களா… இல்லை திரும்பியும் நீ பார்க்கவேண்டிய உலகம் நிறையா இருக்குன்னு கதை சொல்லுவீங்களா? சீனியர்… உலகம் எவ்வளவு பெரிசா வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனா என் உலகம் முழுவதும் நீங்க மட்டும் தான் நிறைஞ்சு இருக்கீங்க.” என்று எதிர் பாராத நேரத்தில் சொல்லும்போது எனக்கென்று ஒரு அவள் கிடைத்து விட்டாள் என்று நினைச்சு எவ்வளவு சந்தோஷப்பட்டோம். என் மேல அவ வச்சிருந்த தீராத காதலை யார் மறுக்க முடியும். அந்த காதல் எனக்கு தெரியாமலேயே நான் எங்கையோ போய் செட்டில் ஆயிருக்கக் கூடாதா…
இப்போ அதே காதலைக் காரணம் காட்டியே “உன் மேல இருக்கிற அளவுக்கு என் வீட்டுக்காரங்களையும் நேசிக்கிறேன். கொஞ்சம் டைம் கொடு”ன்னு ஃபோன்லையே கேட்டா. சரி அதைத்தான் ஒத்துகிட்டேன். திரும்பி போன் வாரம் ஃபோன் பண்ணி “என்னை மறந்திடு”னு ஒரே வார்த்தைல சொல்லிட்டு வச்சா இந்தக் காதல் அவ்வளவு சுலபமான விஷ்யமா ஆயிடுச்சா என்ன? ஒரு வருஷம் கொஞ்சம் பயமா இருந்தாலும் அங்க இங்கன்னு சுத்தினோம். ஆனா அதிக நேரம் அளவளாவினது, சண்டை போட்டது எல்லாமே இந்த ஃபோன்ல தான். அவ நினைச்ச நேரத்துக்கு ஃபோன் எடுக்கலைன்னா அதுக்குன்னு ஸ்பெஷல் சண்டை. ஒவ்வொரு சண்டையிலும் தான் எங்கள் உறவு ரொம்பவே பலுப்பட்டது. இப்போ மறந்திடுன்னு ஒரு வார்த்தைல சொல்லிட்டாளே. மறந்தே தீர்க்க வேண்டிய கட்டாயத்துல கொண்டு வந்து விட்டு விட்டாளே.
ஒரு வாரமா அவகிட்ட இருந்து தகவல் இல்லையேன்னு அவளோட காதலை எவ்வளவு கரிச்சு கொட்டினேன். அவ மறந்திடுன்னு சொன்னா அதுதான் கடைசி வார்த்தையா.
ஆனா இவளுக்கு எப்படி என் நம்பர் தெரியும். அவள் கூட வேலை பார்க்கிறவள். ஆம் அவள் தான் இன்று காலை ஃபோன் பண்ணி அந்தச் செய்தியைச் சொன்னாள். ஏதோ… உடம்பு சரியில்லைன்னு ஆஸ்பித்திரியில அட்மிட் ஆயிருந்த அம்மாவை பார்க்கப் போய்கிட்டு இருந்த அவளுக்கு போன வாரம் ஆக்ஸிடெண்டாம். ஸ்பாட்லையே….. .
இந்த ஃபோன் மட்டும் வரலைன்னா என் வாழ்க்கை……………:(
அன்பின் அயன்
கதை செல்லும் விதம் நன்று – ரசித்து மகிழ்ந்தேன்
நல்வாழ்த்துகள் அய்ன
நட்புடன் சீனா
idellam yenaku theriyade!..